ஜனவரி 30 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அதிரடி அறிவிப்பு... !

 
விடுமுறை

தியாகராஜர் ஆராதனை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தஞ்சாவூரில் மிக சிறப்பாக  கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த திருவிழா சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் நினைவாக கொண்டாடப்படும்  திருவிழா. நடப்பாண்டை பொறுத்தவரை  177வது ஆராதனை திருவிழா  ஜனவரி 26 ம் தேதி நடைபெறுகிறது.

தியாகராஜர் ஆராதனை விழா

விழாவின் முக்கிய நிகழ்வான மங்கல இசை 30ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.  இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக் கலைஞர்கள்  பாடல்கள் பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்த உள்ளனர்.இந்நிலையில் 177வது தியாகராஜர் ஆராதனை திருவிழாவை முன்னிட்டு  30ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 10ம் தேதி பணிநாளாக செயல்படும் என  கலெக்டர் அறிவித்துள்ளார்.  

  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழா  ஜனவரி  26ம் தேதி மாலை 5 மணிக்குத் தொடங்க உள்ளது.  இந்த விழாவில் 26ம் தேதி மாலை  5 மணிக்கு தேசூர் செல்வரத்தினம் குழுவினரின் மங்கல இசையுடன் தொடங்கும். தொடக்கவிழாவுக்கு  தியாகப் பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார்.
அமைப்பின் செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்புரையும்,   துக்ளக்ஆசிரியர் குருமூர்த்தி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்துப் பேசுகின்றனர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சிறப்புவிருந்தினராகவும்,  சபா செயலாளர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் நன்றியுரையும் கூறுகின்றனர்  அன்று இரவும் ஜனவரி 27, 28, 29ம் தேதிகளிலும் பல்வேறு கலைஞர்களின் பாட்டு, வீணை, நாகசுரம், தவில் உட்பட பல்வேறு கலை  நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தியாகராஜர் ஆராதனை விழா
விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி ஜனவரி 30-ம் தேதி காலை 8.30 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கும். காலை 9 மணிக்கு  விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி,தியாகராஜ சுவாமிக்கு இசையஞ்சலி செலுத்துவர்.  இசை விழா தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளதுஇதற்கு முன்பாக  தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து அவரதுசிலை விழா பந்தலுக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்படுகிறது. அன்று இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடையும் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web