பரத நாட்டிய கதையில் ஜெயம் ரவி... மோகன்ராஜா இயக்கத்தில் தயாராகும் அடுத்த ப்ளாக்பஸ்டர்!

 
ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2003 ஆம் ஆண்டு தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகனாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையே சேகரித்து வைத்த ஜெயம் ரவி, மோகன் ராஜா இயக்கத்தில் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மோகன் ராஜா, ஜெயம் ரவி கூட்டணியில் கடந்த 2015 ஆம் ஆண்டு தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

ஜெயம் ரவி

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மோகன் ராஜா, ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் ஜெயம் ரவி தற்போது கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் கமிட்டாகி இருப்பதால் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கிடையில் மோகன் ராஜா, சின்ன படம் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.​இந்நிலையில் தனி ஒருவன் 2 படத்திற்கு பிறகு மோகன் ராஜா, ஜெயம் ரவி நடிப்பில் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறாராம்.

ஜெயம் ரவி

இந்த புதிய படம் பரதநாட்டிய கதையில் உருவாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஜெயம் ரவி ஏற்கனவே பரதநாட்டியத்தில் ஆர்வம் உடையவர் மட்டும் அல்லாமல் முறையாக பரதநாட்டிய கலையை கற்றுக் கொண்டவர். எனவே அதற்கு ஏற்ற கதையை மோகன் ராஜா தயார் செய்துள்ளாராம். இந்த படம் தனி ஒருவன் படத்தைப் போல ஜெயம் ரவியின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web