பெரும் சோகம்... 60 அடி பள்ளத்தில் உருண்ட ஜீப்... மனைவி கண்முன்னே கணவர் துடிதுடித்து பலி!

 
ஜீப்

நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்த கணேசன், தனது மனைவி மஞ்சுளா உடன் ஜீப்பில் கோயில் சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கல்லார் மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றுக் கொண்டிருந்த போது, ஜீப் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

விபத்து

இந்த விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்துச் சென்ற மேட்டுப்பாளையம் தீயணைப்பு வீரர்கள் மஞ்சுளாவை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 ஆம்புலன்ஸ்

விபத்து தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web