மாதம் ரூ.71,900 சம்பளம்... உயர்நீதி மன்றத்தில் 33 காலிப்பணியிடங்கள்... !

 
உயர்நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர் மற்றும் ஜெராக்ஸ் மெஷின் ஆப்ரேட்டர் உள்ளிட்ட 33 பணியிடங்களை நிரப்புவதற்காக திறமையும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலி பணியிடங்களுக்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளநிலை பட்டப்படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியிடங்களுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்கள் இப்பணியிடங்களுக்கு இன்று முதல் 13.02.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
இளநிலை பட்டப்படிப்புடன் தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு ஹையர் முடித்திருக்க வேண்டும். கூடுதலாக ஆபீஸ் ஆட்டோமேஷன் கம்ப்யூட்டர் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆபீஸ் ஆட்டோமேஷன் கம்ப்யூட்டர் படிப்பை முடிக்காதவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் பயிற்சி காலத்தில் அதனை முடிக்க வேண்டும். 

சென்னை உயர்நீதிமன்றம்
இந்த பணியிடங்களுக்கு மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையும், கூடுதலாக சிறப்பு ஊதியமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெலிபோன் ஆபரேட்டர் பணிக்கும், காசாளர் பணிக்கு ஒருவர் வீதம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஜெராக்ஸ் ஆபரேட்டர் பணிக்கு 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், இந்த பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.16,600 முதல் அதிகபட்சமாக ரூ.60,800 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web