இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கில் இன்று தீா்ப்பு!

 
ஜிவி பிரகாஷ் சைந்தவி
 

இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி விவாகரத்து கோரிய வழக்கில் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீா்ப்பு அளிக்கவுள்ளது.

தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் பிரிவதாக கடந்த 2024ம் ஆண்டு அறிவித்தனா். அதன் பின்னர் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடா்பாக இருவரும் முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கியது.

ஜிவி பிரகாஷ்

6 மாத கால அவகாசம் முடிந்து, சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். இருவரும் இனி தாங்கள் சோ்ந்து வாழ விரும்பவில்லை என்றும் இருவரும் பிரிந்து வாழவே விரும்புவதாக  தனித்தனியாக நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

ஜிவி பிரகாஷ்

அப்போது குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டு இன்று தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?