எதிர்காலம் நம்மை மன்னிக்காது... சிறுமி படுகொலை.. கமல்ஹாசன் கண்டன ட்வீட்!
புதுச்சேரியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயமாகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக மகளிர் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி முதல்வர் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ரூ20 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். இது குறித்து நடிகரும், மக்கள் நீதிமய்ய கட்சியின் தலைவருமான கமலஹாசன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்துள்ளது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலின இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு மாநிலங்களில் சமீபமாக போதை வஸ்துக்கள் அதிகரித்து வருகின்றன. பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
எங்கே போகிறோம்?
— Kamal Haasan (@ikamalhaasan) March 6, 2024
புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி…
ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா?
குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது என பதிவிட்டுள்ளார். கமலஹாசனின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!