பவதாரணியின் குரலால் என் கவிதைக்கு உயிர் கிடைத்த தருணம்... வைரலாகும் கனிமொழி எம்.பி.யின் இன்ஸ்டா... !

 
பவதாரணி

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இலங்கையில் காலமானார். இவருக்கு வயது 47. இவர்  கல்லீரலில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இலங்கையில் ஆயுா்வேத மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது. சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இந்த தகவல் கிடைத்ததும் உடனடியாக அவரது சகோதரர் இலங்கை கிளம்பி சென்றார். இளையராஜா ஏற்கனவே ஒரு இசை நிகழ்ச்சிக்காக இலங்கையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   பவதாரிணி மறைவிற்கு அரசியல், திரைப்பிரப்பலங்கள் என பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், திமுக துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் செய்தியுடன் உருக்கமான பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில்    'அம்மாவின் வாசனை' என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடலாக இசையமைத்தார். பவதாரிணியின் தனித்துவமான  அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது.

பவதாரணி


அவர் பாடிய பிறகே அந்தக் கவிதை முழுமை பெற்றதாக உணர்ந்தேன். இந்த பாடல்  இதுவரை வெளிவரவில்லை.  அந்தப் பாடலை அவர் நினைவாக இங்குப் பகிர்கிறேன் எனப் பதிவிட்டு, அந்தப் பாடலையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web