குஷ்பூ வீடு முற்றுகை... கெத்து காட்டிய காங்கிரஸ்... !!

 
குஷ்பூ

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்து திரையுலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல கண்டன குரல்களும் சர்ச்சைகளும், புகார்களும் உருவாகின .  அதன்படி நடிகை திரிஷா பற்றி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்தார். அப்போது சமூக வலைதளத்தில் குஷ்புவுக்கு எதிராக பதிவிட்டவருக்கு அளித்த பதிவில் சேரி மொழி என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு  காங்கிரஸ் எஸ்.சி. துறை கண்டனம் தெரிவித்திருந்தது.இதற்கு பகிரங்க  மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தியது.

குஷ்பூ

 
ஆனால் 'சேரி' என்ற  பெயரில் எத்தனையோ ஊர்கள் உள்ளன. பிரஞ்சு மொழியில் சேரி என்பதற்கு அன்பு என்று அர்த்தம். நல்ல எண்ணத்தோடு இந்த பதிவை  வெளியிட்டிருந்தேன்  அதிலும் உள்நோக்கத்தோடு எதிர்த்தால் நான் பொறுப்பல்ல. எனவே வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என மறுத்து விட்டார்.காங்கிரஸ் எஸ்.சி. துறையினர் குஷ்பு மன்னிப்பு கோர வலியுறுத்தினர். இதன் அடிப்படையில்  மாநில தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் இன்று குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர்.  

மன்சூர்

இதன் பேரில்  சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள குஷ்பு வீட்டுக்கு செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குஷ்பூ வீடு இருக்கும் ரோட்டில் யாரையும் அனுமதிக்கவில்லை.  பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் அருகே உள்ள சாலையில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதித்தனர்.இன்று காலை 10 மணிக்கே அந்த ரோட்டில் 100க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் காங்கிரஸ் சார்பில் திரண்டிருந்தனர்இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web