நெகிழ்ச்சி... ரக்ஷா பந்தனுக்கு தம்பிக்கு சிறுநீரக தானம் செய்த சகோதரி!!
நேற்றும் இன்றும் ரக்ஷா பந்தன் இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்ஷா பந்தன் விழாவில் சகோதரி தனது சகோதருக்கு கையில் ராக்கி அணிவிப்பர். சகோதரர் அதே நேரத்தில் சகோதரிக்கு பரிசுப் பொருட்களை வழங்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள பெண் ஒருவர் தனது சகோதரரின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முடிவு செய்தார். 48 வயதாகும் ஓம்பிரகாசின் மூத்த சகோதரி ஷீலா பாய் .
ஓம் பிரகாஷ் கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். டயாலிசிஸ் செய்ய வேண்டிய அளவுக்கு அவரது சிறுநீரகங்கள் மோசமாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒரு சிறுநீரகம் 80 சதவீதமும் மற்றொறு சிறுநீரகம் 90 சதவீதமும் சேதம் அடைந்துவிட்டன. நீண்ட யோசனைக்குப் பிறகு, குஜராத் நாடியாட் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். சிறுநீரக தானம் செய்பவர் தேவை என்று மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் கூறியபோது, ஓம்பிரகாஷின் மூத்த சகோதாரியே உடனடியாக சிறுநீரக தானம் அளிக்க முன்வந்தார்.
மூத்த சகோதரி ஷீலாபாய் பால் ராய்பூரின் திக்ரபராவில் வசிக்கிறார். அவர் தன் தம்பியின் அறுவை சிகிச்சைக்கு சிறுநீரக தானம் செய்வதற்காக தேவையான அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டார். சோதனை முடிவுகளில் அவரது சிறுநீரகத்தை ஓம்பிரகாசுக்குப் பொருத்தலாம் என மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதன்படி ஓம்பிரகாஷுக்கு செப்டம்பர் 3ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. ஓம்பிரகாஷ் மற்றும் ஷீலாபாய் இருவரும் தற்போது அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகின்றனர். இது குறித்து ஷீலாபாய் நான் எனது சகோதரனை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன். அதே நேரத்தில் அவன் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். அதனால் தான் இந்த செயலை செய்ய நானாக முன்வந்துள்ளேன் என கூறியுள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னதாக ஷீலாபாய் ஓம் பிரகாஷுக்கு ராக்கி கட்டி தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!