குலசை தசரா திருவிழா... 200 சிறப்பு பேருந்துகள்... பாதுகாப்புப் பணியில் 4,000 போலீசார்!

 
நாளை குலசையில் சூரசம்ஹாரம்... பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

குலசை தசரா திருவிழா பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என கோட்டாட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தசரா

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் செப். 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக். 2ஆம் தேதி மகிசா சூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறும். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பான அரசுத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கௌதம் தலைமையில்  திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார், வட்டாட்சியர் பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன், கோயில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் ஆகியோர் முன்னிலையில்  நடந்தது.

குலசை திருவிழா

கூட்டத்தில்,  பக்தர்கள் வசதிக்காக 25 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள், 280 கழிப்பிடங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தம், 6 இடங்களில் வாகன நிறுத்தங்கள், தரிசனத்துக்கு கூடுதல் வரிசைப் பாதை, 64 கண்காணிப்பு கேமராக்கள், 24 மணி நேர மருத்துவ வசதி, தயார் நிலையில் தீயணைப்பு வாகனம், 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள், கொடியேற்ற நாளில் 1000 போலீசாரும், அக். 1, 2ஆம் தேதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?