குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா ... மாலையணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்!!

 
குலசேகரன்பட்டினம்

தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்குகிறது. இந்த திருவிழாவில் பக்தர்கள் காளி வேடம் அணிந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்காக பக்தர்கள் இன்று   60 நாள் விரதம் தொடங்கினர்.  விழாவின்  முக்கிய நிகழ்வான  சூரசம்ஹாரம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற உள்ளது.  

குலசேகரன்பட்டினம்

இந்த திருவிழாவில் பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி  வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதில் காளி வேடம் அணியும் பக்தர்கள் மட்டும்  60 நாட்கள் விரதம் இருப்பது வாடிக்கை.  மற்ற வேடம் அணியும் பக்தர்கள் 40 நாள், 20 நாள் என விரதம் இருந்து வருகின்றனர்.  

குலசேகரன்பட்டினம்

இந்நிலையில் காளி வேடம் அணியும் பக்தர்கள் நேற்று காலையில் கடலில் புனித நீராடி சிவப்பு ஆடை அணிந்து முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினர். பின்னர் பூசாரி குமார் பட்டரிடம் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளார்.  மாலை அணிந்து கொண்ட   பக்தர்கள் வீடுகளுக்கு செல்லமாட்டார்கள். அந்தந்த ஊர்களில் தனி குடிசை அமைத்து முத்தாரம்மன் படம் மற்றும் காளி வேடம் அணியும் கிரீடம், சடை முடி, சூலாயுதம், வீர பல், கண்மலர் இவைகளை  காலை, மாலை பூஜை செய்து வருவார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web