பகீர் வீடியோ... வாக்கிங் சென்ற பெண்ணிடம் நகைப்பறிப்பு!

 
செயின் பறிப்பு

 லக்னோவில் செப்டம்பர் 11 ம் தேதி  அதிகாலை 5.30 மணி அளவில் மூதாட்டி ஒருவர் ஜன்கிபுரத்தில் வாக்கிங் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரில் ஒருவர் அந்த மூதாட்டியை பின் தொடர்ந்து வந்தார். மற்றொருவர் பைக்கில் காத்திருந்த நிலையில் பின் தொடர்ந்தவர் மூதாட்டியின் சங்கலியை பறித்து கொண்டு ஓடினார்.

இதன் பிறகு  அங்கிருந்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பின் தொடர்ந்து அந்த மூதாட்டி ஓடினார். இருப்பினும் அவரால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில்  இதுகுறித்து அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில்  விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.  அதன் பின்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.  இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை