ரசிகர்கள் கொண்டாட்டம்... லியோ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!!
இளையதளபதியின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். ஆக்க்ஷன் அதிரடியாக உருவாகியுள்ள இந்த படத்திற்கான இசையமைப்பு அனிருத் . இந்த படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பல முண்ணனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆயுத பூஜை தினமான அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் 'லியோ' திரைப்படம் வெளியாகிறது. . பண்டிகை காலம் என்பதால் அதிகாலை 4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதிக்காக பட தயாரிப்பு நிறுவனம் மூலம் வருவாய் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த அரசு தரப்பு, படம் வெளியாகும் நாளிலிருந்து தொடர் 5 நாட்களுக்கு ஒரே ஒரு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அக்டோபர் 19 முதல் 24 ம் தேதி வரை 5 நாட்களுக்கு ஒரு சிறப்புக் காட்சிகள் வீதம் நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் மட்டுமே திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் திரையரங்குகள் தூய்மையாகவும் படத்திற்கு அதிக அளவில் கூட்டம் வரும் என்பதால் ரசிகர்கள் உள்ளே சென்று வெளியே செல்ல சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...