இன்று முதல் மதுபானங்கள் விலை உயர்வு.... மதுபானப் பிரியர்கள் அதிர்ச்சி... !

 
மதுபாட்டில்

தமிழகத்தில்   இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.   தமிழக அரசு   அதன் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு ரூ10 க்கு  உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் மதுக்கடைகளில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா, பீர் உட்பட  மதுவகைகளின் விலை விரைவில் உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி இன்று முதல்   ஆப் பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.   இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது. 

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!
மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.   அதன்படி, 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்கலின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்று 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட உயர்தர ரக  மதுபானங்களின் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பார் எலைட் சரக்கு டாஸ்மாக் ஸ்டார் ஹோட்டல்


 குவார்ட்டருக்கு ரூ10ம், ஆஃப்-க்கு ரூ20ம், புல் பாட்டில் ரூ40ம் உயரும். இதே போல், உயர் ரக மதுபானங்கள் குவார்ட்டருக்கு ரூ20 ம், ஆஃப்க்கு ரூ40ம், ஃபுல் பாட்டிலுக்கு ரூ80ம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  650 மிலிட்டர் அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக  டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி, 750 மி.லி, 1,000 மி.லி மதுபானங்கள் அந்தந்த ரகத்துக்கு ஏற்ப விலை உயர்த்தப்பட்டுள்ளது.  பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கப்பட்டு வருகிறது.  இந்த திடீர் விலை உயர்வு  மதுபானப்பிரியர்களுக்கு   அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web