காதல் தோல்வி! வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை! போலீசார் விசாரணை!
காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி அனிதா. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கனகராஜ் இறந்து விட்டார். இதனால் அனிதா தன்னுடைய மகன்களான அல்ஜின் ஷால் (22), ஆன்றோ ஷால் ஆகியோரை கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார்.
மருத்துவத்துறையில் ரேடியாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்துள்ள அல்ஜின் ஷால், தற்போது சரியான வேலை கிடைக்காததால் கூலி வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே அல்ஜின் ஷால் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு அவர் சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நிலையில், காலையில் நீண்ட நேரம் ஆகியும் அல்ஜின் ஷால் தூங்கிய அறை திறக்கப்படவில்லை.
இதனால் அவரது தாய் அனிதா கதவை திறக்க முயன்ற போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே சத்தம் போட்டு மகனை அழைத்தார். அங்கிருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை. இதனால் பதற்றமடைந்த அனிதா, அக்கம் பக்கத்தினரை வரவழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு அல்ஜின் ஷால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அனிதா அதிர்ச்சி அடைந்தார். மகனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருமனை போலீசார் அல்ஜின் ஷால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். காதல் விவகாரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!