காதல் மனைவியை உணவில் விஷம் கலந்து கொலை ... கணவன் பரபரப்பு வாக்குமூலம்....!!

 
ஸ்வேதா

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் வசித்து வருபவர்  தர்ஷன். இவர்  கல்லூரி படித்த காலத்தில் இருந்தே ஸ்வேதாவை காதலித்து வந்தார்.   இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். தர்ஷன் மற்றும் ஸ்வேதாவுடன் சேர்ந்து, பெங்களூரு கொடிகேஹள்ளி அருகே ட்ரூ மெடிக்ஸ் லேப் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இருமல் மருந்தில் விஷம்
 கடந்த சில நாட்களாக கணவரை பிரிந்த பெண்ணுடன் தர்ஷன் தகாத உறவில் ஈடுபட்டார். இதனை  கேள்விப்பட்டதும் ஸ்வேதா  கண்டித்தார்.  அந்த பெண்ணுடனான தொடர்பை கைவிடுவதாக தர்ஷன் உறுதிஅளித்தார்.  இருப்பினும், தர்ஷன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த  4 நாட்களுக்கு முன்பு ஸ்வேதா திடீரென உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக தர்ஷன் கதறி அழுதார். மேலும் ஸ்வேதாவை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.ஆனால், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக ஸ்வேதாவின் குடும்பத்தினர் கோனிபிடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

பிரேத பரிசோதனை அறிக்கையில் ஸ்வேதாவின் உடலில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தர்ஷனை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது ராகி உருண்டையில் சயனைடு கலந்து  கொடுத்து ஸ்வேதாவை கொன்றதாக தர்ஷன் ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீசார் கூறுகையில், “தகாத உறவை அறிந்த மனைவியை கொலை செய்ய தர்ஷன் திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு ஸ்வேதா உணவில் சயனைடு கலந்து விட்டார். இதனை சாப்பிட்ட ஸ்வேதா  காலையில்  படுக்கையில் இறந்து கிடந்தார். மாரடைப்பால் இறந்தது போல் அழுது கொண்டிருந்தான்”  எனக் கூறி   தர்ஷனை கைது செய்தனர். காதல் மனைவியை கொன்று கணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web