மதுரைக்காரைங்க பாசம்... சீர் செய்யலை... தாய்மாமனுக்கு விஷம் கலந்து மது பார்ட்டி கொடுத்த மருமகன்!
தனது தாயார் இறந்த போது முறையாக செய்ய வேண்டிய சீர் செய்யாததால், தாய்மாமன் மீது வருத்தத்தில் இருந்த மருமகன், மதுவில் விஷம் கலந்து கொலைச் செய்தது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மேலூரில் நடைப்பெற்ற இந்த சம்பவம், இருவீட்டு உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இப்போது தான் தாயை இழந்த சோகம் தீரும் முன்பாக உறவினர்களுக்கிடையே மாமனைக் கொன்ற மருமகன் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் பனையன் (45). அவரது உறவினர்கள் வீரணன், கருவாமொண்டி ஆகியோருடன் கடந்த ஜூன் 3ம் தேதி அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது வாங்கி, மூவருமாக அருந்தியுள்ளனர். இந்நிலையில், மது அருந்தி முடித்ததும் பனையன் மட்டும் தொடர்ந்து வாந்தி எடுத்த நிலையில், மயக்கமடைந்துள்ளார்.
மயக்கமடைந்த பனையனை மீட்டு, அருகில் இருந்தவர்கள் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைப் பலனளிக்காத நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியிலேயே பனையன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பனையனுடன் சேர்ந்து மது அருந்திய வீரணன், கருவாமொண்டிக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலூர் மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவரில் வீரணனுக்கு உடல்நலக்குறை எதுவும் ஏற்படாததால், சந்தேகமடைந்த போலீசார் வீரணனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், வீரணன் தாயார் அண்மையில் காலமான நிலையில், இறுதி சடங்கில் பங்கேற்ற பனையன், தாய்மாமன் செய்ய வேண்டிய சீர் வரிசை வழங்காததால், மதுவில் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் திரவத்தை கலந்து கொடுத்து பனையனைச் கொலை செய்தது தெரிய வந்தது. அதன் பின்னர் வீரணனைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!