4 மாநில விருதை வென்ற கதையாசிரியர் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்!

 
நிஜாம் ராவுத்தர்

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க கதையாசிரியர்களில் ஒருவராக நிஜாம் ராவுத்தர் வலம் வந்தார். ‘ஜக்காரியாவின் கர்ப்பிணி’ படத்தின் மூலம் கதையாரிசிரியராக அறிமுகமானவர் நிஜாம். இப்படம் கேரளாவில் நான்கு மாநில அரசு விருதுகளை வென்றது. பாம்பே மிட்டாய், ரேடியோ போன்ற படங்களுக்கும் கதை எழுதியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த 'பாரத சர்கார் உல்பனம்' பல சர்ச்சைகளை உருவாக்கியது.

இதில் பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த தணிக்கை குழு அனுமதி மறுத்ததால் படம் 'ஒரு சர்கார் உலகம்' என்ற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தின் போஸ்டரை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட நிஜாம், படம் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பத்தனம்திட்டா மாவட்டம் கடமானிட்டா பகுதியில் வசித்து வந்த நிஜாம் இன்று காலை திடீரென உயிரிழந்தார். 49 வயதான நிஜாம் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். மறைந்த நிஜாமுக்கு சஃபினா என்ற மனைவியும், ரசூல் மற்றும் அஜ்மி என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

திரையுலகில் வருவதற்கு முன்பு, நிஜாம் சில காலம் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். அப்போது கோழிக்கோடு ஐஸ்கிரீம் பார்லர் சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஐஸ்கிரீம் பார்லர் விவகாரத்தில் இளம்பெண்கள் பாலியல் தொழிலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் குறித்து பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு பாராட்டுக்குரியவர் நிஜாம். அவரது திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web