17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது... பெரும் பரபரப்பு!
டெல்லியின் வசந்த்குஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனம் ஸ்ரீ சாரதா இந்தியா மேலாண்மை நிறுவனம் . இங்கு 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் நிர்வாகியாக சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி பொறுப்பு வகித்து வந்தார்.இவர் அங்கு படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை தருவதாக புகார் எழுந்துள்ளது. மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவது, மாணவிகளை அத்துமீறி தொடுவது போன்ற செயல்களை செய்து வந்தார்.
இது குறித்த புகார்களின் அடிப்படையில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அப்போது 17 மாணவிகள் சைதன்யானந்த சரஸ்வதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் சைதன்யானந்த சரஸ்வதிக்கு எதிராக ஆகஸ்ட் 4ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சாமியார் சைதன்யானந்த சரஸ்வதிக்கு தொடர்புடைய ரூ.8 கோடி மதிப்பிலான சொத்துகளை காவல்துறை முடக்கியுள்ளது. இந்நிலையில் ஆக்ராவில் ஒரு ஹோட்டலில் மறைந்திருந்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சைதன்யானந்த சரஸ்வதியை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
