பெரும் பரபரப்பு.. துப்பாக்கி முனையில் பேருந்தை கடத்திய நபர்.. பயணிகளுக்கு நேர்ந்த சோகம்!

 
ரியோ டி ஜெனிரோ

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள நோவோ ரியோ பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பிரேசிலின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்கின்றனர். அங்கிருந்து மினாஸ் ஜெரைஸுக்குப் புறப்பட ஒரு பேருந்து தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது ஒருவர் கையில் துப்பாக்கியுடன் பேருந்தில் ஏறினார்.

மேலும் பேருந்தில் இருந்த பயணிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பணயக்கைதிகளாக வைத்திருந்தார். அந்த பஸ்சில் குழந்தைகள், முதியவர்கள் உட்பட பலர் இருந்தனர். அவர் சுட்டதில் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதற்கிடையில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு பேருந்து நிலையத்தை சுற்றி ஓடத் தொடங்கினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பயணிகளை பிடித்து வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரத்துக்குப் பிறகு அந்த நபர் பேருந்தில் இருந்த பயணிகளை விடுவித்து பொலிலிடம் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் சிக்கிய 17 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர். காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web