லாரி மோதி கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே பலி... திருமணத்திற்கு சென்ற போது சோகம்!
திருச்சியை அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (24) லாரி ஓட்டுநரான இவருக்கும், சேலம் மாவட்டம், நாவலூரில் வசித்து வரும் ரேணுகாவுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் சுகாஷினி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கோவிந்தராஜ் திருச்சி பண்ணக்காரன்பட்டியில் உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மனை ரேணுகாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையும், பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் புறவழிச்சாலையில், தனியார் வேளாண்மை கல்லூரிக்கு எதிரே இவர்கள் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று இவர்களது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கோவிந்தராஜ், ரேணுகா இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
பயங்கர வேகத்தில் லாரி மோதிய நிலையில், கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து தகவல் தெரிந்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற காவல்துறையினர், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பிச் சென்ற லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அசுர வேகத்தில் வரும் லாரி பேருந்து கார்கள், டிரக்குகள் இவை சாலையேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கவனிக்காமல் விபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இம்மாதிரியான விபத்துக்கள் நெடுஞ்சாலையில் தற்போது அடிக்கடி நடக்கின்றன. அதே போல் நள்ளிரவு நேரங்களில் சாலைகளில் பள்ளம் இருந்தாலும் கண்டறிய முடிவதில்லை. இவையும் விபத்துகளுக்கு காரணமாக இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!