நடிகர் மன்சூர் அலிகான் கைது? சின்மயி ட்வீட்டால் திரையுலகில் பரபரப்பு!

 
திடீர் என்று அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில்  சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவரை நேரில் அழைத்து விசாரிக்க 41a எனப்படும் நோட்டீஸ் அனுப்பப்படும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக, பாடகி சின்மயி ட்விட்டரில் வெளியிட்டுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்புஏற்படுத்தியுள்ளது.  

பட்ட காலிலேயே படும் என்பார்கள். சிலர் மைக்கைப் பார்த்தாலே பேட்டியளிக்கும் போது ஆவேசமாகி விடுகிறார்கள். அப்படி த்ரிஷா குறித்து, நடிகர் மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கடந்த இரு தினங்களாக கோலிவுட் முழுக்க வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், தன்னிலை விளக்கம் தருவதற்காக இன்று சென்னையில் தனது வீட்டில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் நடிகர் மன்சூர் அலிகான்.அந்நிகழ்வின் துவக்கத்தில் தேசிய கீதத்தை மன்சூர் அலிகான் அவமதித்துள்ளதாக அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.



அது வரை, மன்னிப்பு கேட்க மாட்டேன், நடிகர் சங்கத்துக்கு எச்சரிக்கை என்று ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் இறுதியில் தேசிய கீதத்தைப் பாடினார்.

த்ரிஷா

அப்போது, அவர் எழுந்து நின்று பாடினாலும், கையை உயர்த்தியபடியும் அங்கும் இங்கும் ஆடியபடியும் தேசிய கீதத்தைப் பாடினார். இதற்குதான் பத்திரிகையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தேசிய கீதத்தை அவமரியாதை செய்யும்படி நீங்கள் பாடி இருக்கிறீர்கள் என அவர்கள் கேள்வி எழுப்பியதும் மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களிடம், ‘நான் எழுந்து நின்றுதான் பாடினேன். நீங்கள்தான் தப்பாக கேள்வி கேட்கிறீர்கள்’ என விவாதம் செய்து கொண்டிருக்க மன்சூர் அலிகானுக்கு ஜெயில் உறுதி என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

 60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web