மாரிமுத்துவின் இறுதி ஊர்வலம்... பெருங்குரலெடுத்து கதறியழுத தாய்! மொத்த கிராமும் திரண்டு வந்து அஞ்சலி!

 
மாரிமுத்து

பெரும் சோகமாக நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் மொத்த திரையுலகினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இத்தனை மக்களின் அன்பை சம்பாதித்திருக்கும் நடிகர் மாரிமுத்துவின் இறுதி ஊர்வலம் இன்று காலை 10.30 மணிக்கு அவரது சொந்த ஊரான மதுரை, பசுமலைத்தேரியில் நடந்து வருகிறது.

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து நேற்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். இதனை அடுத்து நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மாலை வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், நேற்று மாலை அவரது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டது. தற்போது இறுதிச் சடங்கு நடந்து வருகிறது.

மாரிமுத்து

மொத்த பசுமலைத்தேரி கிராமமும் திரண்டிருந்து, கண்ணீரில் கரைந்தது. ரசிகர்கள், ஊர்மக்கள், உறவினர்கள் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வர மாரிமுத்துவின் உடலைப் பார்த்து அவரது தாயார் தலையில் அடித்துக் கொண்டு பெருங்குரலெடுத்து கதறி அழுதது காண்போரை உலுக்கியெடுத்தது.

மகன் எப்போது வருவான் என நேற்று மாலையில் இருந்து உறவினர்களிடம் விசாரித்து வந்தவர், அவரது உடலைப் பார்த்ததும் கட்டியணைத்து முத்தமிட்டு கதறி அழுத காட்சி காண்பவரையும் கலங்கடித்துள்ளது. அவரது மரணம் குறித்து உறவினர்கள், “மாரிமுத்து இப்போது தான் சினிமாவில் பேரும் புகழோடும் இருந்தார். ஒவ்வொரு மாதமும் முடிந்தளவு எங்களைப் பார்க்க வந்து விடுவார்.

மாரிமுத்து உடலைப் பார்த்துக் கதறியழுத தாயார்...

ஆரம்ப காலத்தில் சினிமாவில் ரொம்பவும் கஷ்டப்பட்டார். நன்றாக அறிவோடு படிக்கக்கூடியவர். பெயருக்கு ஏற்றாற் போலவே அவரது கையெழுத்தும் முத்து முத்தாக இருக்கும். அவரது இழப்பு எங்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாக உள்ளது” எனக் கூறியழுதனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web