ரயில்வே இருப்புப் பாதையில் பயங்கர தீ விபத்து.. அச்சத்துடன் பயணித்த பயணிகள் !

 
இருப்பு பாதையில் தீ விபத்து

ஆம்பூர் அருகே ரயில்வே இருப்புபாதையோரம் கொட்டபட்ட ரசாயனம் கலந்த நீரால் பற்றி எரிந்த தீயால் அச்சத்துடன் பயணித்த ரயில் பயணிகள்.. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் ரயில்வே இருப்பு பாதையோரம் இருந்த செடிகள் தீப்பற்றி மளமளவென எரிவதை  கண்ட  அப்பகுதி மக்கள் சிலர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயற்சிக்கும் போது அந்தப் பகுதியில் கெமிக்கல் காலி கேன்கள் குடோன் அமைந்துள்ளது.

அந்த  குடோனில் வைக்கப்பட்டுள்ள காலி கேன்களை சுத்தப்படுத்தும் போது அதில் இருக்கும் ரசாயனம் கலந்த நீரை ரயில்வே இருப்பு பாதையோரம் கொட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் அவதிக்குள்ளாகினர்.

இதனையடுத்து பெங்களூரில் இருந்து சென்னை செல்லக்கூடிய பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் புகை மூட்டத்துடனும், கெமிக்கல் கலந்த துர்நாற்றம்  வீசியதால் ரயிலில் செல்லக்கூடிய பயணிகள் மிகவும் அச்சத்துடன் பயணம் செய்யக்கூடிய சூழல் ஏற்பட்டது. மேலும் ரயில்வே இருப்புப் பாதையோரம் யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தனரா? அல்லது ரசாயனம் கலந்த  நீர் கொட்டப்பட்டுள்ளதால் தீப்பற்றி எரிந்ததா என ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web