மருத்துவ கல்லூரி மாணவர் பேருந்து மோதி பலி... மாணவர்கள் முற்றுகை போராட்டம்!!

 
கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் வசித்து வருபவர்  நல்லதம்பி. இவருடைய மகன் 21 வயது   அனாரியன். இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில்   பிஎஸ்சி ஆக்சிடென்ட் அன்ட் எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார். அனாரியன் மருத்துவ கல்லூரிக்கு அருகில் அறை எடுத்து தங்கி படித்து வந்துள்ளார்.   நேற்று இரவு   நண்பரின் இருசக்கர வாகனத்தில் சாப்பிடுவதற்காக வெளியில் சென்றார்.

விபத்து

மருத்துவக்கல்லூரிக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் கலெக்டர்  அலுவலகம் அருகே  திருவாரூர் நோக்கி வந்த பேருந்து இரு சக்கர வாகனத்தை  மோதியதில் அனாரியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.  இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  மாணவன் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

ஏற்கனவே  மெடிக்கல் படிக்கும் மாணவ, மாணவிகள் விடுதி வசதி இல்லை என்றும், விடுதி வசதி கேட்டு தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  விடுதி வசதி இல்லாத காரணத்தினால் தான் மாணவன் விபத்தில் உயிரிழந்து விட்டதாகக் கூறி சக மாணவ, மாணவிகள் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web