இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
இன்று தமிழகம் முழுவதும் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் வங்கிகள் , அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11:00 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும்.

அதனைப் போலவே அதிகாலை ஐந்து மணி முதல் காலை எட்டு மணி வரையும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
