பரபரப்பு... அமைச்சர் வீட்டில் குண்டு வீச்சு... காவலர் படுகாயம்.. !!

 
மணிப்பூர்

மணிப்பூரில்  இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. மெய்தி மற்றும்  , பழங்குடியின மக்களுக்கும் இடையே வெடித்த  கலவரத்தில்  180 பேர் பலியானார்கள். இன்னும் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மணிப்பூர் மாநில ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் யும்னம் கேம்சந்த் வீடு நோக்கி கையெறி குண்டு வீச்சு நடந்துள்ளது.  இதில் அவரது வீடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், திடீரென வீட்டை நோக்கி கையெறி குண்டை வீசியெறிந்தனர்.

மணிப்பூர்


 பிரதான வாயிலுக்குச் சற்று முன்பே குண்டு கீழே விழுந்து வெடித்ததில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் தினேஷ் சந்திரதாஸ் மற்றும் ஒரு பெண் படுகாயம் அடைந்தனர்.  அவர்களுக்கு கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டது. முதல்வர் பைரேன்சிங் குண்டுவீச்சு நடந்த சம்பவ இடத்தை பார்வையிட்டு இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   அதே நேரத்தில் மணிப்பூரில் உள்ள இரு சமூகத்தினரும் தங்கள் பகுதி மாவட்டங்களின் பெயரை மாற்றுவதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மணிப்பூர்

இதுகுறித்து தலைமை செயலாளர் ”  மாநில அரசின் அனுமதியின்றி, மாவட்டங்கள், நிறுவனங்கள், இடங்கள், துணை கோட்டங்கள்  பெயரை சிலர் மாற்றி வருகின்றனர். இந்தச் செய்கை  தற்போதைய சூழ்நிலையில்  இரு சமூகங்களுக்கிடையே பெரும் பிளவை உருவாக்கிவிடும்.  சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து விடும். எனவே, இதுபோன்று பெயர் மாற்றுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web