எம்.எல்.ஏ . கார் விபத்தில் பலி.. அரசியல் தலைவர்கள் இரங்கல்...!!

 
ஷேக் சப்ஜி

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்ட சுயேட்சை எம்.எல்.ஏ. ஷேக் சப்ஜி . இவருக்கு வயது 57. இவர் இன்று பிற்பகலில் தனது காரில்  எலூருவில் இருந்து பீமாவரம் நோக்கி  சென்று கொண்டிருந்தார்.   அவர்  ஷெர்குவாடா பகுதியில் சென்று கொண்டிருந்த போது  சாலையில் எதிரே வந்த கார் எம்.எல்.ஏ. ஷேக் சப்ஜியின் கார் மீது படுபயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் எம்.எல்.ஏ ஷேக் சப்ஜி சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக பலியானார்.  

ஷேக் சப்ஜி


இந்த விபத்து குறித்து தகவல அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக   சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எம்.எல்.ஏ. ஷேக் சப்ஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஷேக் சப்ஜி

எம்.எல்.ஏ . காரின் மீது மோதிய கார் ஓட்டுனர் தப்பி சென்று விட்டதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அரசியல் வட்டாரத்தில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இவரது திடீர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  பீமாவரத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள அவர் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.  இந்த திடீர் விபத்து  சம்பவம் குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு  ஷேக்சப்ஜி  குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web