அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் பகுதி அருகே நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு, அதே பகுதியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர், பங்களாதேஷ் நோக்கி சென்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கத்தால் ஏற்படும் வளிமண்டல சுழற்சி தமிழகம் முழுவதும் மழை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதன்படி நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், நவம்பர் 5, 6, 7 தேதிகளில் வட தமிழகத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நவம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் தென் தமிழகத்திலும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
