8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடைந்துள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. வானிலை ஆய்வாளர் கணிப்புகளின் படி, இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மறுநாளில் புயலாகவும் வலுவடையக்கூடும்.

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
