ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் மொயீன் அலி!! ரசிகர்கள் உற்சாகம்!!
இன்று இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்த தொடர் மிகவும் முக்கியமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இங்கிலாந்து வீரர் மொயீன் அலி ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021ல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்தது. இந்த ஆஷஸ் தொடரில் அவரை விளையாட வைப்பதற்காக அவரது முடிவை திரும்ப பெற வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது. இது குறித்து கடந்த ஒரு வாரமாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் மொயீன் அலி மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார்..
இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இங்கிலாந்து அணி கூடுதல் பலம் பெற்றுள்ளதாக அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர். மொயீன் அலி பந்துவீச்சில் தாக்கம் ஏற்படுத்துவதுடன் சிறந்த முறையில் பேட்டிங் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!