பருவமழை பாதுகாப்பு? பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு.....

தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் பள்ளிகளில் மின் இணைப்புகள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் நீர்நிலைகளில் குளிக்க மாணவர்களை அனுமதிக்க கூடாது என பெற்றோருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
மழையால் பள்ளியில் சில வகுப்பறைகள், கழிவறைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை பயன்படுத்தக் கூடாது. பள்ளிகளில் மின்மோட்டார்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.திறந்தவெளி கிணறு, கழிவுநீர் தொட்டி, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அறுந்து கிடக்கும் மின்கம்பி அருகே மாணவர்கள் செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மழை பெய்யும்போது மரங்களின் கீழ் மாணவர்கள் ஒதுங்கக்கூடாது என விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவை பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!