மூன்றாம் பிறை 42 ஆண்டுகள் நிறைவு... வைரலாகும் ஹேஷ்டேக்!

 
மூன்றாம் பிறை

 
தமிழ் சினிமாவில்  தலைமுறை தாண்டியும்  ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடி கமல் ஸ்ரீதேவி. இருவரின் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே வெற்றி தான். இருந்தாலும் எவர்க்ரீன் படமான இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருந்து வருவது மூன்றாம் பிறை. பாலுமகேந்திரா இயக்கத்தில் இந்த படம் வெளியாகி 42 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் கமல் கதறும் காட்சிகள் கண்களின் ஈரத்தை கசியவிடும். முடிவு ஏற்கனவே தெரியும் என்றாலும் இந்த தடவையாவது சீனுவ மறந்திடாத விஜி என ரசிகர்கள் கதறும் காட்சிகள் கண்முன்னே வரும்.

மூன்றாம் பிறை

இந்த படத்திற்காக  2 தேசிய விருதுகள். அதன்படி சிறந்த நடிகர் விருது கமலுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பாலுமகேந்திராவுக்கும் வழங்கப்பட்டது. ஸ்ரீதேவிக்கு தேசிய விருது நிச்சயம் என அனைவரும் கூறிய நிலையில் கமலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது ஆச்சர்யம் தான். கண்ணதாசனின் கடைசி பாடல் வரிகளான “ உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே “  வரிகள் படத்தின் முடிவை முன்பே கூறிவிட்டன. இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படம் இது தான். தேசிய விருது படம் பொதுவாக வசூலில் சொதப்பி விடும்.

மூன்றாம் பிறை

ஆனால் இரண்டிலும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது இந்த திரைப்படம் தான் என்றால் அது மிகையில்லை. திரையரங்குகளில் ஒரு வருடத்தை தாண்டியும் வெற்றிகரமாக ஓடியது. இளம் இயக்குநர்கள் பலருக்கு முன்மாதிரியாக அமைந்த படம் இது தான் என்றாலும் இந்த படத்தின் தரத்தை மற்ற படங்கள் இதுவரை எட்டவில்லை என்பதே உண்மை. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 42 ஆண்டுகள் நிறைவடைந்ததை கலையுலகம் கொண்டாடி வருகிறது.  இதற்காக சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web