மத்திய பட்ஜெட் : ஆந்திரா , பீகார் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

 
பட்ஜெட்

 பீகாரின் ஆன்மீக தளங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு. நாளந்தாவில் சுற்றுலா மேம்பாட்டிற்கு அதிக முன்னுரிமை. நகர்புறங்களில் சில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.  காலநிலை மாற்றம் மற்றும் பசுமை திரும்புதல் திட்டங்களுக்கு சிறப்பு கொள்கை உருவாக்கப்படும்
நில அளவை திட்டங்களில் புதிய தொழில்நுட்பங்கள். அந்நிய நேரடி முதலீடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க 3 புதிய நடைமுறைகள் உருவாக்கப்படும். அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக சில குறிப்பிட்ட விதிகள் தளர்த்தப்படும்.

பட்ஜெட்

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.9% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  நிதி பற்றாக்குறை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைந்துள்ளதாக  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.அத்துடன் மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என கூறியுள்ளார்.  அணுசக்தி துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரிச்சலுகை செய்யப்படும். NTPC - BHEL கூட்டுறவில் 800 மெகாவாட் அல்ரா கிரிட்டிக்கல் தொழில்நுட்பத்தில் மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்.

பட்ஜெட்

பீகாரில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீடு. பீகார் மாநில நீர்பாசன, வெள்ளத்தடுப்பு திட்டங்களுக்கும் புதிய அறிவிப்புகள் வெளியீடுபுதியதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு மத்திய அரசு சார்பில்  ஒரு மாத  ஊதியம் வழங்கப்படும்.
உள்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் பயில 10 லட்சம் ரூபாய் வரையில் கல்வி கடன் வழங்கப்படும்.
பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க 26,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில மூலதன தேவையை உணர்ந்து அம்மாநிலத்திற்கு கூடுதல் ரூ15,000 கோடி  ஒதுக்கப்படும்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web