திமுக நிர்வாகி சரமாரியாக வெட்டி படுகொலை.. மர்ம கும்பல் வெறிச்செயல்..!
மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்த திருமுருகன், 78வது வார்டு திமுக மாவட்ட செயலாளராக உள்ளார். நேற்றிரவு வழக்கம்போல் தனது வீட்டு முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5க்கும் மேற்பட்ட கும்பல் திருமுருகனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதில் திருமுருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசியல் பகையால் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க