அதிகாலையில் சோகம்... ஏசி வெடித்து சிதறியதில் தாய், மகள் மூச்சுத்திணறி பலி!!

 
வெடித்த ஏசி

சென்னை அம்பத்தூர்  மேனாம்பேடு இந்திரா நகரில் வசித்து வருபவர்   ஹாலினா .   இவரது மகள் நஸ்ரியா  . இவர்கள் இருவரும் வீட்டில் உள்ள ஏசியை ஆன் செய்து விட்டு நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வயர்களில் தீப்பிடித்து எரிந்ததால் கரும்புகை சூழ்ந்தது. அப்போது, கரும்புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே காவல் மற்றும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஏசி

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்  போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  தீயணைப்பு துறையினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது படுக்கை அறையில் ஹாலினாவும் நஸ்ரியாவும் தீயில் கருகி உயிரிழந்த நிலையில்   சடலமாக கிடந்தனர். இதையடுத்து இருவரது உடலையும் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்
முதற்கட்ட விசாரணையில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம்.  இருவரும் புகை காரணமாக மூச்சுத்திணறலால் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இச்சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web