குழந்தைகளை கொலை செய்து தாயும் தற்கொலை... குடும்ப பிரச்சனையால் விபரீதம்!

 
ஜோதி

சமீபகாலமாக குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்ளும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . சகிப்பு தன்மையும், விட்டுக்கொடுக்கும் மனோபாவமும் குறைந்து வருவதே காரணம் என கவலை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கர்நாடக மாநிலம்   ஹொரேயாலா கிராமத்தில் வசித்து வரும் தம்பதி  யோகேஷ்  ஜோதி தம்பதியினர். இவர்களுக்கு  10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஜோதி, தனது கணவருடன் ஹொரேயாலா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

தற்கொலை
இவர்களுக்கு  7 வயதில் பாந்தவ்யா, 3 வயதில்  மானசா  என 2 மகள்கள். கடந்த சில மாதங்களாகவே  கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.  நேற்று காலையில் யோகேஷ் வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டார்.  வீட்டில் தனியாக இருந்த ஜோதி, தனது 2 மகள்களையும் தூக்கிலிட்டு கொலை செய்த   பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அக்கம்பக்கத்தினர் ஜோதியின் வீட்டுக்கு வந்த போது   ஜோதியும், அவரது குழந்தைகளும் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஆம்புலன்ஸ்

உடனடியாக அவரது கணவருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர்  ஜோதி மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக ஜோதி தனது 2 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்  . குடும்பத் தகராறு காரணமாக குழந்தைகளை கொலை செய்து தாயும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web