அதிர்ச்சி... தாய் , தந்தை, மனைவி, மகனுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை!!

 
திலக்

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி இந்திராநகரில் வசித்து வருபவர்  சிவராமன். இவர் பெங்களூரில் உள்ள விமான நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வசந்தா மற்றும் இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரின் 2வது மகன் திலக், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் 2வது மகனான திலக், அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் 6 வயது  வாய் பேச முடியாத மகன்  வசித்து வந்தனர்.

திலக்

வாய் பேச முடியாத மகனுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனது .  தந்தையாக திலக்   மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.    இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார்.அதன்படி  வீட்டிலிருந்த தாய், தந்தை, மகன் மற்றும் மனைவி அனைவருக்கும்  திலக், தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து விட்டார். அத்துடன் திலக்கும் மாடியில்  உள்ள ஒரு  அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  அவரது மனைவி மகேஸ்வரி, தனது சகோதரருக்கு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

திலக்
உடனே   மகேஸ்வரியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு போன் செய்து   மகேஸ்வரியின் வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அப்போது சிவராமன், திலக், மகேஸ்வரி மற்றும் அவரது 6 வயது மகன் ஆகியோர் உயிரிழந்த நிலையில்  கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.அவரது தாய் வசந்தா மயக்க நிலையில் இருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு   சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன்   அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர்  உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web