மகள் கண்முன்னே தாய் சராமாரியாக குத்தி படுகொலை... பயங்கரம்...!!

 
அற்பிதா

கர்நாடகா மாநிலம், மாண்டியா  பாண்டவ்வூர் தாலுகாவில் வசித்து வருபவர்  பர்வதம்மா. இவருக்கு வயது 50. இவர் தன்னுடைய மகள் அர்பிதாவுடன் நேற்று இரவு கோயிலுக்குச் சென்றார். சாமி தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது  இருளான பகுதி வந்தது. சரியாக அந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர்   கத்தியால் பர்வதம்மாவை சரமாரியாக குத்தத் தொடங்கினார்.  கத்தி கூச்சலிட்டுக் கொண்டே அவரிடமிருந்து பர்வதம்மா தப்பி ஓட முயற்சித்தார்.  மர்மநபர்  அவரை விடாமல் துரத்தி துரத்தி மர்மநபர், கத்தியால் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்த பர்வதம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.

விளாத்திகுளத்தில் மனைவி கொலை


மகள்  கண் முன்னால் தாய் குத்திக்கொலை செய்யப்பட்டதைக் கண்டதும்  அர்பிதா அதிர்ச்சியில் உறைந்தார். அந்த பக்கமாக சென்ற வாகனஓட்டிகள் உதவியுடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்   கொலை செய்யப்பட்ட பர்வதம்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்
மேலும் இச்சம்பவம்குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.  பர்வதம்மாவுக்கும், கொலையாளிக்கும் என்ன தொடர்பு , திடீர் கொலை எதனால் . முன்பகை காதல் விவகாரம், சொத்துப் பிரச்சனை என பல கோணங்களில் விசாரணை நடைபெறு வருகிறது . மகள் கண்முன்னே தாய் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web