‘மெளன ராகம்’ சந்திரமெளலி... இயக்குநர் பாரதிராஜாவின் குருநாதர் காலமானார்!
பிரபல நடிகரும், பழம்பெரும் இயக்குநரும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் குருநாதருமான திரு. ரா. சங்கரன் இன்று காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், இயக்குநருமான ரா. சங்கரனுக்கு வயது 92. ‘ஒரு கைதியின் டைரி’, ‘பகல் நிலவு’, ‘அழகர் சாமி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது, ‘தேன் சிந்துதே வானம்’, ‘தூண்டில் மீன்’, ‘வேலும் மயிலும் துணை’ போன்ற படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.
எனது ஆசிரியர்
— Bharathiraja (@offBharathiraja) December 14, 2023
இயக்குனர் திரு.ரா.சங்கரன்
சார் அவர்களின் மறைவு
வேதனை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/SJmO0dApeq
இயக்குநர் பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலக் குறைவு காரணமாக சங்கரன் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா தனது எக்ஸ் பக்கத்தில், ‘எனது ஆசிரியர் இயக்குநர் ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இன்றளவிலும், மெளனராகம் படத்தில் இவர் நடித்த சந்திரமெளலி கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!