விஜயகாந்த் வீட்டில் துக்கம்... பிரேமலதா தாயார் காலமானார்!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் தாயார் அம்சவேணி இன்று வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமான சென்னையில் காலமானார்.
உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 83.

இது குறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் மற்றும் கழகப் பொருளாளர் திரு. எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் மறைவு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த், கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ், பாண்டிச்சேரி ராமச்சந்திரா மருத்துவமனை சேர்மன் திருமதி.ராதா ராமச்சந்திரன் அவர்களின் தாயாரும், திரு.L.C.கண்ணையா அவர்களின் மனைவி திருமதி.K.அம்சவேணி அவர்கள் (வயது 83) இன்று (07.10.2025) காலை 7.30 மணி அளவில் வயது மூர்ப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். விருகம்பாக்கம் இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் நாளை (08.10.2025) மதியம் 1 மணி அளவில் தொடங்கி வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் அடக்கம் செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
