காலையிலே பரபரப்பு... எம்.பி., நவாஸ் கனி உறவினர் வீடுகள், அலுவலகங்கள் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!

 
நவாஸ் கனி


ராமநாதபுரம் தொகுதியின் எம்.பி., நவாஸ் கனியின் சகோதரருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி, எம்.பி.,யாக பதவி வகித்து வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது சகோதரர் அன்சாரி, எஸ்.டி.கொரியர் என்ற நிறுவனத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார்.

நவாஸ் கனி

இதன் தலைமை அலுவலகம் சென்னை பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்கள் உள்ளது. 
இதேபோல் நவாஸ் கனிக்கு நெருக்கமானவராக அறியப்படும் சாய் சுக்கிரன் என்கிற நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் அடிக்கும் தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

நவாஸ் கனி

இந்நிலையில் இன்று காலை முதல் அன்சாரிக்கு சொந்தமான எஸ்டி கொரியர் நிறுவன அலுவலகங்கள் மற்றும் நரேஷிற்கு சொந்தமான டி.நகர் இல்லம் ஆகியவற்றில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.எஸ்டி கொரியர் நிறுவனத்தின் மூலம் பொருட்கள் எதுவும் சட்டவிரோதமாக கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்க துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்.பி., வேட்பாளரின் சகோதரர் மற்றும் நண்பரின் வீடுகளில் நடைபெற்று வரும் இந்த அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web