30 நாட்களுக்குள் திருப்பி தர வேண்டும்... வங்கிகளுக்கு பறந்த உத்தரவு!!

 
ரிசர்வ் வங்கி

கடன் முடிந்ததும் அசல் ஆவணங்களை 30 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் அரசுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவைகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில்    "அசையும் அல்லது அசையா சொத்துகளின் பேரில் கடன் வாங்கியவர்கள், கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய 30 நாட்களுக்குள் அவர்களது அசல் ஆவணங்களை அவர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.  

ரிசர்வ்


கடனை முழுமையாகச் செலுத்தியவர்களுக்கு அவர்களின் ஆவணங்களை திருப்பிக் கொடுப்பதில் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வேறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிக்கல்களையும் துயரங்களையும் படவேண்டியுள்ளது.  கடன் வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், வங்கிகள் மற்றம் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மத்தியில் பொறுப்பான கடன் வழங்கும் நடத்தையை மேம்படுத்துவதற்கும் இத்தகைய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.


கடன் முடிந்ததும், அசல் ஆவணங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க  வேண்டும். ஆவணங்கள் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு, இடம் அனைத்தும்  கடன் அனுமதி கடிதங்களில் குறிப்பிடப்பட வேண்டும். தனி நபர் கடன் அல்லது கூட்டுக் கடன் என என்ன வகையாக இருந்தபோதிலும்  ஆவணங்களை திருப்பித் தருவதற்கான  திட்டமிடப்பட்ட நடைமுறையை வங்கிகளும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதனை வங்கிகள் வெளிப்படையாக தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு அதனை  வாடிக்கையாளர்கள் அறியும்படிச் செய்ய வேண்டும்.

ரிசர்வ் வங்கி


கடன்கள் முழுவதுமாக  கட்டி முடிக்கப்பட்ட பிறகு 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களை திருப்பித் தருவதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான சரியான காரணத்தை   வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். தாமதத்திற்கு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனம் காரணமாக இருந்தால், அது கடன் பெற்றவருக்கு ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் ரூ5,000/-  வீதம் ஈடுசெய்ய வேண்டும். அசல் ஆவணங்கள் தொலைந்தாலோ   சேதம் ஏற்பட்டாலோ சான்றளிக்கப்பட்ட நகல்களை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு கடன் வழங்கிய வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனம் உதவி செய்யவேண்டும்.    விதிவிலக்கான சில நேர்வுகளில் வங்கிகளுக்கு அசல் ஆவணங்களை திருப்பதித் தர கூடுதலாக 30 நாட்கள், அதாவது மொத்தம் 60 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.  " என ரிசர்வ் வங்கி  அனைத்து வங்கிகளுக்கும்  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web