அதிர்ச்சி ... மருத்துவமனையில் நர்ஸ் மர்ம மரணம்...!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமாந்துரையில் வசித்து வருபவர் வைஷ்ணவி . இவர் காமராஜ் சாலையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அதே மருத்துவமனையில் செவிலியர்களுக்கான ஓய்வு அறை உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முடித்துவிட்டு மருத்துவமனை மேல் தளத்தில் உள்ள செவிலியர்கள் தங்கும் பகுதிக்கு சென்ற வைஷ்ணவி காலை நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. சக செவிலியர்கள் தற்செயலாக ஓய்வு அறைக்கு சென்றுள்ளனர். வைஷ்ணவி தனது துப்பட்டாவை பயன்படுத்தி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் செவிலியரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!