தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அனஹாத் சிங் அரையிறுதிக்கு தகுதி...!!

 
அனஹாத் சிங்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில்  79வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள்    நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் அனாஹத் சிங், பூஜா ஆர்த்தியை எதிர்த்து விளையாடினார்.

வேலவன்
இதில் அனாஹத் சிங் 11-6, 11-8, 11-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் அனாஹத் சிங் 11-7, 11-2, 11-2 என்ற செட் கணக்கில் தியா யாதவை தோற்கடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  ஆடவர் பிரிவில் வேலவன் செந்தில்குமார் கால் இறுதி சுற்றில் 11-3, 11-4, 11-7 என்ற செட் கணக்கில் வேதாந்த் படேலை தோற்கடித்து அரை இறுதி சுற்றில் கால்பதித்துள்ளார்.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web