க்யூட்... நயன் விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள்.. வைரல் போட்டோஸ்!!

 
உயிர் உலக்

தமிழ் மற்றும் பாலிவுட் திரையுலகில் முண்ணனி கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா.இவர் கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேடி  இயக்குனர் விக்னேஷ் சிவனை சென்னை   மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில்  திருமணம் செய்து கொண்டார். இவர்கள் வாடகை தாய் மூலமாக இரட்டைக்குழந்தைகளை பெற்றெடுத்தனர்.   இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என  அக்டோபர் 9ம் தேதி விக்னேஷ் சிவன் டுவிட்டரில்  வெளியிட்டார்.  இதனையடுத்து ஒரு விருது விழாவில் நயன்  குழந்தைகளின் பெயரை அறிவித்தார். அதன்படி  உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என தன் இரண்டு மகன்களின் பெயர்களையும் வெளியிட்டார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்த நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு, குழந்தைகளை வளர்ப்பதிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.  

உயிர் உலக்

படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக வீட்டுக்கு திரும்பி குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது, உடைகள் மாற்றுவது என அவர்களுடன் நேரம் செலவிட்டு  வருகிறார். இந்நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தங்களுடைய இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்த நாளை இன்று கொண்டாடியதாக இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளனர்.   இதுபற்றி விக்னேஷ் சிவன்  இன்ஸ்டாவில் ”என் முகம் கொண்ட... என் உயிர், என் குணம் கொண்ட... என் உலக் (இந்த வரிகளை பதிவு செய்ய மற்றும் நம்முடைய புகைப்படங்களை ஒன்றாக வெளியிட நீண்டகாலம் காத்திருந்தேன் எனதருமை குழந்தைகளே) ”என தெரிவித்து, என்னுடைய மகன்கள் உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்வீக் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

உங்கள் இருவரையும் வார்த்தைகளால் விவரிக்கும் விசயங்களை கடந்து, வாழ்க்கையில் எல்லாவற்றையும் மற்றும் ஒவ்வொரு விசயமும் கடந்து, அப்பாவும், அம்மாவும் அன்பு செலுத்துகிறோம். எங்களுடைய வாழ்வில் வந்ததற்காகவும், மிக மகிழ்ச்சியாக ஆக்கியதற்காகவும் உங்கள் இருவருக்கும் நன்றி. நீங்கள், அனைத்து நேர்மறையான மற்றும் வாழ்த்துகளை கொண்டு வந்துள்ளீர்கள். இந்த ஓராண்டு முழுவதும், வாழ்நாள் முழுமைக்கான மகிழ்ச்சிக்கான தருணங்கள்  நிறைத்திருந்தது. உங்கள் இருவரின் மீதும் அன்பு செலுத்துகிறோம். நீங்கள் எங்களுடைய உலகம் மற்றும் எங்களுடைய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என பதிவிட்டு உள்ளார். 

உயிர் உலக்


இந்த புகைப்படங்களில் ல், இரட்டை குழந்தைகள் இருவரும் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளில் காணப்படுகின்றனர். இந்த பதிவை வெளியிட்டதும், ரசிகர்கள் பலரும்  பிறந்த நாள் வாழ்த்துக்களை குழந்தைகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.   நயன்தாரா சமீபத்தில் இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த 'ஜவான்' படம் திரையில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.இதனையடுத்து  ஜெயம் ரவி ஜோடியாக 'இறைவன்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவை தவிர மேலும் 2 படங்களும் கைவசம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web