டாஸ்மாக்கில் புதிய மால்ட் பீர் ... மதுபானப்பிரியர்கள் உற்சாகம்... !!
மதுபானப்பிரியர்களில் பலவகை உண்டு. குறிப்பிட்ட பிராண்ட், சோஷியல் டிரிங்கிங்க், அதிக போதை, நட்சத்திர பார்ட்டிகளில் மெயின் என பல வகைகள் உண்டு. அதிலும் பலராலும் விரும்பப்படுவது பீர் வகைகள் தான். போதை, சோஷியல் , பார்ட்டி என எல்லா கொண்டாட்டத்திற்கும் பீர்வகைகள் தான் பிரதானம். தமிழகத்தில் மதுபானப்பிரியர்களை கவர்ந்திழுக்கும் வகையில் புதியவகையான மதுபானங்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் முதன் முறையாக பார்லி வகை தானியங்கள் மூலம் பீர் தயாரிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வர உள்ளன. இந்த பீர் பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது இந்த பீர் 650 மி.லி, 375 மி.லி அளவுகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீர் பிரியர்களின் மத்தியில் சூப்பர் ஸ்ட்ராங் பீர் என்ற நற்பெயரை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த புதிய வகை பீர் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என டாஸ்மாக் நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது.650 மி.லி ரூ. 200க்கும் 325 மி.லி ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. அத்துடன் சிறிய வகை டின்களில் இந்த வகை பீர் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் மதுபான கடைகளில் விற்பனைக்கு வர உள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மதுபானப் பிரியர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் தற்போது தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் பீர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. இது டாஸ்மாக் விற்பனையில் மேலும் ஒரு சாதனையைப் படைக்கும் என கூறியுள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...