சூப்பர்... செப்டம்பர் 1 முதல் கிரெடிட் கார்டுதாரர்களுக்கு புதிய அப்டேட்... !
இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்ட பிறகு கிரெடிட் கார்டுகள் பரிவர்த்தனை முறையும் மாறிவிட்டது. அந்த வகையில் கிரெடிட் கார்டுகளில் யுபிஐ மூலம் பணப்பரிவத்தனைகள் செய்து கொள்வது தான் தற்போது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் யுபிஐ ஆப்களில் உங்களது கிரெடிட் கார்டு விவரங்களை கொடுத்து இணைத்துவிட்டால் போதும் டிஜிட்டல்se முறையிலேயே பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். இதனால் கையில் கார்டுகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்நிலையில் வழக்கமான கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கும் அளவுக்கு இணையான ரிவார்டு பாயிண்டுகளை ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தேசிய கொடுப்பனவு கழகம் தற்போது பிறப்பித்துள்ளது. ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி யூபிஐ மூலமாக பணம் செலுத்த முடியும். ஆனால் இதன் மூலமாக கிடைக்கக்கூடிய வெகுமதிகள் மற்ற கார்டுகளை விட மிகவும் குறைவானவையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. தற்போது NPCI இன் உத்தரவின்படி இந்த புதிய விதிகள் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
