அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!! வீட்டை விட்டு வெளியே போகாதீங்க!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்க இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்து. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் நீலகிரி, கோவை, அரியலூர், கடலூர், ராமநாதபுரம் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக. செப்டம்பர் 11 மற்றும் 12ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 13 முதல் 17 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!