தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!!

 
கோவை குண்டுவெடிப்பு

கோவை மாவட்டம் உக்கடம்  கோட்டைமேடு பகுதியில் உள்ள அக்டோபர் 23,2022 ல்  ஈஸ்வரன் கோவில்   கார் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அதே பகுதியில் வசித்து வரும்  ஜமேசா முபின் உயிரிழந்தார். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவருடைய வீட்டில் இருந்து வெடிபொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டன.

என்ஐஏ

இதில்  தொடர்புடைய முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.   இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இது குறித்து   விசாரணை தொடங்கப்பட்ட நிலையில்  வழக்கு தொடர்பாக முகமது தவ்பிக், குன்னூர்   உமர்பாருக், பெரோஸ்கான், ஷேக் இதயத்துல்லா, சனாபர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.   இதுவரை கோவை கார் வெடிப்பு சம்பவத்தில்  11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில்,இன்று  கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும்  30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள்  அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் 2 பெண்களை கைது செய்தது என்.ஐ.ஏ.

அதன்படி சென்னையில் திருவிக நகர் முஜ்பீர் ரகுமான் வீட்டிலும், நீலாங்கரை, கோவையில் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜிஎம் நகர், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முகமது இத்ரிஸ்  வீடு உட்பட தமிழகம்  முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.   கோவையில் உள்ள அரபிக்கல்லூரியில் பயங்கரவாதத்துக்கு  பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. கோவை அரபிக் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web